Pages

Saturday 2 May 2020

I loved this explanation . Even a child can understand ....#கொரோனா_வைரஸ்_கிருமி

I loved this explanation . Even a child can understand .

கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான 
விளக்க பதிவு!!

*நான் Dr.P.மணி.
நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். 

இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன்.

என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர்.

கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன். 

முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் .

ஒரு ஆர்என்ஏ
(நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA) 
அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட சானிடைசர்கள், சோப்பு நுரை பட்டால் இந்த உறை கரைந்து வைரஸ் அவுட்). 

அந்த உறையின் மீது ஆங்காங்கே முட்கள். இது தான் கொரோனா வைரஸ். 

இந்த முட்களின் வேலை எளிதாக எதிலும் ஒட்டிக் கொள்ளவதே.

இந்த முட்களும் புரதத்தால் ஆனவையே.

கொரோனா வைரசில் இந்த முட்கள் பார்ப்பதற்கு கிரீடத்தில் (Crown) இருக்கும் வேலைப்பாடு போல இருப்பதால் இந்த வைரசுக்கு கொரோனா வைரஸ் எனப் பெயர்.

இதை ஏன் அரைகுறை உயிரி என்கிறோம்.

இந்த வைரஸ்களால் தானாக வாழ முடியாது. 

இது ஒரு முழுமையான 
ஒட்டுண்ணி. 

ஏதோ ஒரு உயிரினத்தின் செல்லுக்குள் புகுந்து அந்த 
செல்லில் இருக்கும் திட, திரவப் பொருட்களையே உணவாக்கிக் கொண்டு பல்கிப் பெருகுவது தான் வைரஸ்களின் வேலை. 

செல்லுக்கு வெளியே சில மணி நேரமோ அல்லது சில நாட்களோ தான் இதனால் தாக்குப் பிடிக்க முடியும்.

இந்த வைரஸ் மூக்கு, வாய் 
அல்லது கண் வழியாக உள்ளே நுழைந்தவுடன் முதலில் 
தொண்டை பகுதியை தாக்குகிறது. 

தொண்டையில் உள்ள திசுக்களின் செல்களில் இது பல்கிப் பெருகியவுடன் தான் தொண்டை வலியும் இருமலும் தொடங்குகிறது. 

இந்த வைரஸ்களை எதிர்த்து நம் உடலின் எதிர்ப்பு சக்தி (Immune system)உடனே மோதலை தொடங்குகிறது. 

அந்த மோதலின் அறிகுறி தான் காய்ச்சல். 

பெரும்பாலான வைரஸ்கள் 
அதிக வெப்ப நிலையை தாங்க முடியாதவை என்பதால், உடலின் வெப்ப நிலையை உயர்த்தி வைரஸ்களை காலி செய்ய நமது உடலின் எதிர்ப்பு சக்தி முயற்சிக்கிறது.

இந்த மோதலின்போதே பெரும்பாலான வைரஸ்களை 
நமது உடல் கொன்று விடுகிறது, 
கொரோனா வைரஸ் உள்பட. 

நமது உடலின் Immune system ஒரு மாபெரும் பாதுகாப்பு அரண். 

வைரஸோ, பாக்டீரியாவோ 
அல்லது வேறு ஒரு நுண்ணுயிரோ உடலுக்குள் புகுந்தவுடன் அவற்றை நமது உடல் இரு வகையான காரணிகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கிறது.

முதலாவது அந்த நுண்ணுயிர் வெளியிடும் வேதியியல் பொருட்கள், இரண்டாவது அந்த நுண்ணுயிரின் உருவம்.

இது வெளியில் இருந்து வந்த பொருள் என்பதை கண்டுபிடித்த உடனே நமது ரத்தத்தின் வெள்ளை அணுக்கள் அவற்றை கொல்லும் வேலையில் இறங்குகின்றன. 

வைரஸ், பாக்டீரியாவை அப்படியே விழுங்கி ஏப்பம் விடும் வேலைக்கு Macrophages, Neutrophils போன்ற அடியாட்களை வெள்ளை அணுக்கள் அனுப்புகின்றன.

ஆனால், இதையும் தாண்டி வைரஸோ பாக்டீரியாவோ 
உடலை பதம் பார்க்க ஆரம்பித்தால், அடுத்த கட்ட அரண்கள் வேலையில் இறங்கும். 

அதில் ஒன்று Innate lymphoid cells. 

இதன் ஒரு பிரிவான T- Killer cellகளின் வேலை வைரஸ்களால் பாதிக்கப்பட்ட உடல் செல்களை கொன்று, வெளியேற்றி உடல் திசுக்கள் மேலும் மோசமடையாமல் தடுப்பது. 

மேலும் வைரஸ்களுக்கு உணவாகிக் கொண்டிருக்கும் செல்களின் எண்ணிக்கையை குறைப்பது. 
இது தான் இதன் வேலை.

அதே நேரத்தில் Macrophages, Neutrophils போன்றவற்றால் தடுக்க முடியாத வைரஸ்களை ஒழித்துக் கட்ட நமது உடல் அனுப்பும் பிரம்மாஸ்திரம் தான் B cells எனப்படும் வைரஸ்களை தாக்கும் செல்கள்.

இந்த செல்கள் வைரஸ்களின் உருவத்தை அடையாளம் கண்டு, அதன் மீது ஒட்டிக் கொண்டு, அப்படியே இழுத்துச் சென்று Lumph nodes எனப்படும் நிணநீர் சுரப்பிகளில் வைத்து, அங்கு சுரக்கும் ரசாயனங்கள் உதவியோடு வைரஸ்களை கொல்லும்.

இந்த உடல் எதிர்ப்பு சக்தி 
ஒரு பக்கம் இருக்க, தொண்டைப்பகுதியை 
அடைந்த கொரோனா 
வைரஸ்கள் அடுத்ததாக 
நமது உடலை பாதிப்பது நுரையீரலை.

நுரையீரலின் உள் சுவற்றில் இருப்பவை மிக லேசான பில்லியன் கணக்கான எபிதீலியல் செல்கள். 

இந்த செல்களில் கொரோனா வைரஸ் ஒட்டிக் கொண்டு, துளை போட்டு தனது ஆர்என்ஏவை உள்ளே நுழைக்கும்.

இந்த ஆர்என்ஏ செல்லுக்குள் போய் லட்சக்கணக்கில் தனது பிரதிகளை ஜெராக்ஸ் மெசின் மாதிரி காப்பி எடுக்கும். 

இந்த ஒவ்வொரு ஆர்என்ஏவும் ஒரு வைரசாக மாறும்.

அந்த செல் முழுக்கவே வைரஸ்களால் நிறையும்போது, அந்த செல்லே வெடித்து மடியும். 

அந்த வெடிப்பில் இருந்து கிளம்பும் லட்சக்கணக்கான வைரஸ்கள் அடுத்தடுத்த செல்களை இதே போல தாக்கி அழித்து,பல்கிப் பெருகும்.

10 நாட்களில் நுரையீரலின் பெரும்பாலான செல்களை 
இந்த வைரஸ் ஆக்கிரமிக்கும்.

இதுவரையும் கூட பிரச்சனை அதிகமில்லை. 

ஆனால், இந்த வைரஸ்களை அழிக்க நமது உடலின் Immune cells எனப்படும் எதிர் தாக்குதல் செல்கள் நுரையீரலில் நுழைந்து தாக்க ஆரம்பிக்கும்போது தான் பிரச்சனையே துவங்குகிறது.
 
மற்ற வைரஸ்களில் இருந்து கொரோனா இங்கே தான் மாறுபடுகிறது. ழ

இந்த கொரோனா வைரஸ், 
நமது உடலின் எதிர் தாக்குதல் செல்களுக்குள்ளேயே நுழைந்து அதையும் சேதப்படுகின்றன. 

சேதப்படுத்துவதோடு மட்டுமல்ல, அந்த செல்களின் ஜீன்களில் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

நமது Immune system செல்கள் ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாறிக் கொள்வது சைட்டோகைன்ஸ் (Cytokines) எனப்படும் ஒரு வேதிப் பொருள் மூலம் தான்.

ஜீன்கள் பாதிக்கப்பட்ட எதிர் தாக்குதல் செல்கள் குழப்பமான சைட்டோகைன் தகவல்கள் அனுப்ப, நுரையீரலை பாதுகாக்க கிளம்பி வரும் Neutrophils செல்கள், கொரோனா வைரஸ்களுக்கு பதிலாக உடலின் எதிர்ப்பு சக்தி செல்களை தாக்க ஆரம்பிக்கும்.

அதே போல பாதிக்கப்பட்ட நுரையீரல் செல்களை தற்கொலை செய்ய வைத்து நோய் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வேலைக்காக வரும் T- Killer cellகள் வந்த வேலையை விட்டு விட்டு, நன்றாக இருக்கும் நுரையீரல் செல்களை அழியச் சொல்லி தகவல் தரும். 

இதனால் நுரையீரல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, அடுத்ததாக பாக்டீரியா தாக்குதல், நிமோனியா உள்ளிட்ட தோற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும். 

இந்த இடத்தில் தான் மரணங்கள் நிகழ்கின்றன.

இப்படி உடலின் எதிர்ப்பு சக்தியையே நமது உடலுக்கு 
எதிராக திருப்பி விடுவதில் தான் கொரோனா வைரசின் முழு சக்தியும் அடங்கியுள்ளது. 

வைரசின் உருவத்தை வைத்து அடையாளம காணும் B- cellகள் கூட கொரோனாவிடம் இதுவரை எளிதில் வெற்றியை ஈட்டவில்லை.

இந்த வைரஸ்கள் அனுப்பும் வேதியல் தகவல்கள் (Cytokines) எல்லா நேரமும் ஒரே மாதிரியாக இல்லை. 

அவை லட்சக்கணக்கான வகைகளில் மாறிக் கொண்டே இருப்பதால் T-killer cells, B cells ஆகியவற்றால் இவற்றை சரியாக அடையாளம் காண முடியவில்லை. 

இது தான் இந்த வைரசுக்கு எதிராக மருந்தோ தடுப்பு ஊசியோ தயாரிப்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிபது.

நாம் உண்ணும் அல்லது ஊசி மூலம் போட்டுக் கொள்ளும் மருந்துகள் உடலுக்குள் சென்றவுடன் வேதியியல் தகவல்களாக மாறித்தான் நோயை ஏற்படுத்தும் கிருமிகளோடு நேரடியாக மோதுகின்றன,அல்லது உடலின் Immune system- உடன் பேசி, வேண்டிய எதிர்ப்பு மருந்தை உடலையே தயாரிக்க வைக்கின்றன.

 ஆனால், கொரோனா நமது உடல் எதிர்ப்பு சக்தி சிஸ்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றுவிடுவது தான் இந்த வைரசுக்கு எதிராக எந்த மருந்தை வைத்து போராடுவது என்ற குழப்பத்தில் மருத்துவ உலகை ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸ்களின் கெமிக்கல் தாக்குதல்களால் குழம்பிப்போன T-killer cells, 
B cells-களும் ஏற்கனவே 
கொரோனா பாதித்த நுரையீரல்களை மேலும் 
பாதித்து உலகெங்கும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. 

ஆனால், ஏற்கனவே நுரையீரல் பிரச்சனை, நோய் எதிர்ப்பு சக்தியில் பிரச்சனை உள்ளவர்களில் தான் இந்த உயிரிழப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு பிரச்சனை குறைவாகவே உள்ளது.

உடலில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பெரும் குழப்பத்துக்கிடையிலும் பெரும்பாலான நேரங்களில் 
நமது உடல் எதிர்ப்பு சக்தி 
சிஸ்டம் கொரோனா வைரஸை தோற்கடித்துவிடுகிறது.

 நீரிழிவு நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் அதிகமாக இருக்கும் சர்க்கரையால் உடலின் எதிர்ப்பு சக்தி முடக்குகிறது.

அதே போல இதயக் கோளாறு, 
பி.பி உள்ளவர்களின் உடலில் நுண்ணிய ரத்தக் குழாய்கள் போதிய ரத்தத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் வருவதால், உடலின் எல்லா பகுதிக்கும் 
போதிய சக்தி கிடைப்பதில்லை, 
நோய் எதிர்ப்பு சக்தி உள்பட.

ஆனால், சர்க்கரை அளவும் பிபியும் மருந்துகள், உடற்பயிற்சி மூலம் கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை. 

இங்கேயும் உடலின் எதிர்ப்பு 
சக்தி கொரோனாவை தோற்கடித்துவிடுகிறது என்பது தான் நல்ல செய்தி.

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிடுவார்களா? என்பது தெரியவில்லை.

35 ஆண்டுகளுக்கு முன் வந்த எய்ட்ஸ் நோய்க்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. 

அந்த எச்ஐவி வைரசும் கொரோனா வைரஸ் ரகத்தை சேர்ந்தது தான். 

அதுவும் நமது உடலின் எதிர்ப்பு சக்தியை கதிகலங்க வைக்கும் வைரஸ் தான்.

ஆனால், கொரோனா மாதிரி 
எச்ஐவி வைரஸ் மூலம் இவ்வளவு சாதாராணமாக இருமல், தும்மல் மூலம் எல்லாம் பரவவில்லை. 

அந்த வகையில் கொரோனா தான் கொடூரம்.

அதற்குத் தான் வீட்டிலேயே 
முடங்க சொல்கிறார்கள்.

இன்னும் மருந்து கண்டுபிடிக்க இயலாத நிலையில், இந்த நோயில் 
இருந்து தப்பிப்பதே உசிதம்.

இந்த நோய் தாக்குதலை தவிர்ப்பதே இதற்கான இப்போதையே ஒரே மருந்து!

தனித்திருப்போம்!விழிப்புடன் இருப்போம்!!வீட்டிலேயே இருப்போம்!!!கொரோனாவை ஒழிப்போம்!!!!

(தற்போதைய வாட்ஸ் ஆப் செட்டிங்கில் forward மெஸேஜை ஒரு முறைதான் forward செய்ய முடியும் என்பதாலும்,ஒவ்வொரு தடவையாக பல நண்பர்களுக்கு forward செய்வதில் ஏற்படும் சிரமத்தை குறைப்பதற்காக எனக்கு வாட்ஸ் ஆப்பில் வந்த இந்த பயனுள்ள மெஸேஜை காப்பி&பேஸ்ட் செய்து பதிவிட்டுள்ளேன்.

இந்த மெஸேஜை ஐந்து பேருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடியும் என்பதால் இந்த செய்தியை உங்களுக்கு தெரிந்த வாட்ஸ் ஆப் நண்பர்கள்/வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு அனுப்பவும்.)

நன்றி! வணக்கம்!!

பாஜகவில் அங்கம் வகிக்கும் அனைவரும் மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும்

பிரதமராவதற்கும் முன்னர், பாஜக வளரும் பருவத்தில் இருந்தபோது, வாஜ்பாய் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றியபோது, அவரை ஒரு இஸ்லாமியப் பெண் தன் மகளுடன் வந்து சந்தித்தார். தனது மகளுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாகவும், மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமானால், மிகுந்த செலவாகுமென்பதால், அதற்கு தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடியுமா? என ஆதங்கத்தோடு வினவியிருக்கிறார். 

     உடனே வாஜ்பாய் அவர்கள் தானே தன் சிறுநீரகத்தைத் தர முன்வந்துள்ளார். அப்போது அரசாங்கத்தின் அதிகாரி, “அய்யா…. அதற்கெல்லாம் மிகப்பெரிய நடைமுறை உள்ளதே. எனவே தங்களால் அது இயலாது.” என மறுதலித்திருக்கிறார். அதற்கு வாஜ்பாய் அவர்களோ, சற்று உறுதியான குரலில், “அதையெல்லாம் நான் பார்த்துகொள்கிறேன். முதலில் என் சிறுநீரகம் பொருந்துமா? என மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள்” எனக்கூறியுள்ளார். 

         அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

     என்ன ஆச்சரியம்!!! வாஜ்பாய் அவர்களின் சிறுநீரகம் ஏகக்கச்சிதமாக பொருந்தும் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. உடனே நாள் குறிக்கப்பட்டது. தான் வாக்களித்தபடியே வாஜ்பாய் அவர்கள் தனது சிறுநீரகத்தை அந்த இஸ்லாமியப்பெண்ணுக்கு தானமாக அளித்துள்ளார். அப்பெண்ணும் உடல்நலம் தேறியுள்ளார். இது அத்தோடு முடிந்து, மறந்து போயிற்று. 

               பின்னாளில் ஒரு ஆஸ்பத்திரிவிழாவின் போது, வாஜ்பாய் அவர்கள் முன்னிலையில் ”சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை” செய்த மருத்துவர் திடீரென இதனை தனது பேச்சினூடே குறிப்பிட்டுள்ளார். 

      அப்போதுதான் பெரும்பாலானவர்களுக்கு இந்த விவரம் தெரிய வந்துள்ளது. 
ஆனால், தன் வாழ்நாளின் இறுதிவரை ஒற்றைச் சிறுநீரகத்துடன் மட்டுமே வாழ்ந்த வாஜ்பாய் அவர்கள் தனது வாயாலோ, தனது எழுத்தாலோ இதனை தெரிவித்ததில்லை.” 

      இப்போது சொல்லுங்கள்…. நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும். சொத்துக்களை அடைவதற்காக பெற்றத் தாயைக்கூட கொல்லத்துணிகிற, 
      
    கோடிகோடியாய் கொள்ளையடித்து ஊடகங்களை பணத்தால் அடித்து கையகப்படுத்துகிற, 

     பதவிக்கு வருவதற்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கத்தயாராக இருக்கிற,  ஒருவனுக்கு ஒரு இட்லி கொடுத்தாலே இன்றைய சமூகத்தில், ஃப்ளக்ஸ் வைத்து ஃபோட்டோ காட்டும் இன்றைய அரசியல் வா(வியா)திகளுக்கு மத்தியில், 

       இப்படியும் ஒரு மகத்தானவராக வாழ்ந்திருக்கிறார் வாஜ்பாய் அவர்கள். 
”தன்னையே கொடுப்பான்” எனும் அடைமொழி இவருக்கல்லவா பொருந்தும்?

         வீதிக்கொரு மனைவி, மைதானம் நிரம்பும் அளவு வாரிசுகள், தான் கொள்ளை அடிக்க தொண்டர்களை அடிமுட்டாளாக பொய்யைப் பரப்பும் தலைமை, 
 
            ”மக்களால் நான்… மக்களுக்காக நான்…” என முழக்கமிட்டோரும் தன் பெயரில் கோடிகளைச் சேர்த்து, தனது ”வேலைக்காரிக் குடும்பத்தை”யும் குபேரர்களுக்கு இணையாக வாழ்வித்த தாயுள்ளம்(?) கொண்ட தலைமை, 

       தாங்கள் வாங்கும் கூலிகளுக்காக, தன் இனத்தை, தன் கலாச்சாரத்தை, தன் தன்மானத்தை அடமானம் வைக்கும் தலைமைகள் பல இருக்கும் இந்த தேசத்தில்தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந் தேசத்தில்தான் வாஜ்பாய் போன்றவர்களும் வாழ்ந்திருக்கிறார்!

      இவரைப் போன்றோரின் வாழ்க்கை வரலாறு கூட வேண்டாம், இதுபோன்ற சம்பவங்களாவது பள்ளி கல்லூரிப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றதுண்டா?

      இத்தகைய மகத்தானவர் தோற்றுவித்த கட்சியைத்தான் பாரதமண்ணின் மக்கள் மீண்டும் பிரதமராக வந்து விடக் கூடாதென காங்கிரஸின் சோனியா பிரதமராக தவமிருந்து பின் அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் நிலைத்த உறுதியால் ம(ண்)ன்மோகன்சிங் பிரதமராக வழிவகை செய்தது. 

      அந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் அரிசிப்பருப்பையெல்லாம் “ஆன்லைன்” வியாபாரத்தில், யூகபேரத்தில் கொண்டு வந்து, கார்பரேட் கம்பெனிகளுக்கு கைகொடுத்தது. 

    கறுப்புப்பணம் மட்டுமில்லாமல், அரசாங்கமே டூப்ளிகேட் நோட்டை அடிக்கச் செய்தது. 

     ஊழல் உலகமே மிரளும் வகையில் 2ஜி ஊழலை அரங்கேற்றியது. 

     இன்னும் சொல்லொண்ணா வேதனைகளைத் தந்து பாரதத்தினை படுகுழியில் தள்ளியது. 

          இஸ்லாமியக் குடும்பம் என பாராமல் தன் உடலின் உறுப்பினை அளித்த வாஜ்பாய்ஜி அவர்களை மதவாதி என முத்திரை குத்தியது. 

          அவரின் பாஜக விற்கு ”பண்டாரக் கட்சி” என சான்றிதழ் தந்தது. 

      ”பாஜக தேசத்தை மதத்தால் பிரிக்க வழிகோலுகிறது” என வடிகட்டிய பொய்யை மீண்டும் மீண்டும் கூறி, மோசடி செய்கிறது. 

     இன்று அவர்தம் வழியில், அனைத்து நாடுகளும் வியக்கும்வண்ணம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துகிற, தன் குடும்பத்தினை மறந்து, 

     தேசத்திற்காகவே உழைக்கும் பாரதப்பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்களை தேசவிரோத சக்திகள் தரக்குறைவாக வசைபாடுகிறது. 

     வாஜ்பாய்ஜி, அத்வானிஜி, இன்றைய மோடிஜி அவர்களின் பாஜகவில் அங்கம் வகிக்கும் அனைவரும் மக்களிடம் வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டும். 

பாரத அன்னை வெல்க….

Sunday 19 August 2018

LATEST JOB RECRUITMENT NEWS AUGUST 2018:-Federal Bank Recruitment August 2018

LATEST JOB RECRUITMENT NEWS 2018:-
Federal Bank Recruitment 2018 – Apply Online for Officer & Clerk Posts:- Federal Bank invites applications for the recruitment of Clerk & Officer (in Scale I) vacancies. Those Candidates who are interested in the vacancy details & completed all eligibility criteria can read the Notification & Apply Online. U have to visit the following website and apply online: http://ibps.sifyitest.com/fedbnscaug18/
Application Fee

For General/ Other candidates of Sl No 1: Rs. 700/-
For General/ Other candidates of Sl No 2: Rs. 500/-
For SC/ST candidates of Sl No 1: Rs. 350/-
For SC/ST candidates of Sl No 2: Rs. 250/-
Payment Mode (Online): Debit/ Credit Card/ Internet Banking
Important Dates
Starting Date for Apply Online & Payment of Fee: 14-08-2018
Last Date to Apply Online & Payment of Fee: 27-08-2018
Last Date for Printing of Application: 11-09-2018
Date of Online Aptitude Test: 09-09-2018
Age Limit (as on 01-07-2018)
For Sl No 1: 26 Years (candidates should be born on or after 01-07-1992)
For Sl No 2: 24 Years (candidates should be born on or after 01-07-1994)
Vacancy Details
Sl No Post Name Qualification
1 Officers (in Scale I) Post Graduate
with minimum 60% marks
2 Clerk Graduation, Post Graduate
with minimum 60% marks

எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல

#எதுவும் நிரந்தரம் கிடையாது
#அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.
தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை
நடிப்பில் படிப்படியாக
உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.
ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார்.
நாட்கள் நகர்ந்தன ...
பதவி போனது ..
புகழ் போனது ..
சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்"

மனமுடைந்த அர்னால்ட்,
தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்.
இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்
"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்"
"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,
நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்"
"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"
"உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை  ஒரு போதும் நம்பாதீர்கள்"
"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

#எந்தெந்த #அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.*
*உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்*
*எந்தெந்த அரிசி
என்னென்ன பலன்களைத் தரும்!?*
*இதோ*
1. *கருப்பு கவுணி அரிசி*
மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
3. *பூங்கார் அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. *காட்டுயானம் அரிசி* :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.
5. *கருத்தக்கார் அரிசி* :
மூலம்,  மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. *காலாநமக் அரிசி* :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. *மூங்கில் அரிசி*:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.
8. *அறுபதாம் குறுவை அரிசி* :
எலும்பு சரியாகும்.
9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. *தங்கச்சம்பா அரிசி* :
பல், இதயம் வலுவாகும்.
11. *கருங்குறுவை அரிசி* :
இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும்.
12. *கருடன் சம்பா அரிசி* :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. *கார் அரிசி* :
தோல் நோய் சரியாகும்.
14. *குடை வாழை அரிசி* :
குடல் சுத்தமாகும்.
15. *கிச்சிலி சம்பா அரிசி* :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. *நீலம் சம்பா அரிசி* :
இரத்த சோகை நீங்கும்.
17. *சீரகச் சம்பா அரிசி* :
அழகு தரும்.  எதிர்ப்பு சத்தி கூடும்.
18. *தூய மல்லி அரிசி* :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. *குழியடிச்சான் அரிசி* :
தாய்ப்பால் ஊறும்.
20. *சேலம் சன்னா அரிசி* :
தசை, நரம்பு,  எலும்பு வலுவாகும்.
21. *பிசினி அரிசி* :
மாதவிடாய்,  இடுப்பு வலி சரியாகும்.
22. *சூரக்குறுவை அரிசி* :
பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும்.
23. *வாலான் சம்பா அரிசி* :
சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும்.  ஆண்களுக்கு விந்து சக்தி கூடும்.
24. *வாடன் சம்பா அரிசி* :
அமைதியான தூக்கம் வரும்
25. *திணை*
உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும்.
26. *வரகு*
உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும்
27. *சாமை*
காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும்.
28. *குதிரைவாலி*
தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும்.
39. *கை குத்தல்*
உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது.
30. *சிவப்பு காட்டு அரிசி*
இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.
31. *சிவப்பு அரிசி*
கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.
32. *குள்ளகாற் அரிசி*
இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்
*இயற்கை விவசாயம் செய்த பாரம்பரிய அரிசி கிடைக்கும் இடம் கிருஷ்ணகிரி*
*தேவைப்படும் நபர்கள் கீழே உள்ள Whatsapp Link ஐ Click செய்து உங்கள் முகவரி அனுப்பவும்*
http://api.whatsapp.com/send?phone=919488909135
*தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படும்*
Whatsapp Or Call
9488909135
9488909136
*Join WhatsApp Group*
*அரிசி வீட்டு உபயோகத்திற்கு தேவை படுவோர் மட்டும் இனையவும்*
https://chat.whatsapp.com/7TCZp9qWsdL4zmYpsjMCmJ
*கிடைக்கும இயற்கை் பொருட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கும்*
1.பனங்கருப்பட்டி
2.பனஞ்சக்கரை
3.பனங்கற்கண்டு
4.பாரம்பரிய அரிசி வகைகள்
5.நாட்டு சக்கரை
6.நாட்டு வெல்லம்
7.நவ தானியம்
8.சிறு தானியம்
9.பாரம்பரிய அரிசி வகைகள்
10.இந்துப்பு
11.நவ தானியம்,சிறு தானியம்,பாரம்பரிய அரிசி 50 பொருட்கள் சேர்த்து செய்த சத்துமாவு
*நண்பர்களுக்கு பகிருங்கள்*

Friday 3 August 2018

#ஆதார் எதிர்ப்பு #ரகசியம்

.           ஆதார் எதிர்ப்பு ரகசியம்.
    ஆதார் அட்டை அறிமுகப்படுத்தி ஒன்பது வருடங்கள் ஆகி விட்டது.
      ஆதார் அறிமுகப்படுத்த அரசியல்வாதிகள் பலப்பல காரணங்களை சொல்லலாம். ஆனால் உண்மையான காரணம் வடகிழக்கு மாநிலங்களில் வங்க தேசத்தவரின் ஊடுறுவல் தான்.
       அசாம், மேற்கு வங்கம், மேகாலயா
போன்ற மாநிலங்களில் கள்ளத்தனமாக ஊடுறுவிய வங்க தேசத்தவர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் போக, அவர்கள் நாட்டின் சட்டதிட்டங்களை மதிக்காமல் அங்கிருக்கும் பூர்வ குடிகளுடனும் மத ரீதியான மோதல்களில் ஈடுபட்டனர்.
       ஓட்டு வங்கி அரசியலுக்காக இது நாள் வரை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டது. இது நிலமையை இன்னும் மோசமாக்கி சில இடங்களில் அவர்கள் மெஜாரிட்டியானார்கள். பல இடங்களில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிற்கு பெருகி விட்டனர்.
         இது இந்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை வைத்ததோடல்லாமல் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது.
          கண்துடைப்பிற்காகவாவது ஏதாவது செய்தே ஆக வேண்டிய நிலையில் காங்கிரஸ் அறிவாளிகளால் பிப்ரவரி 2009 ல் ஆரம்பிக்கப்பட்டது தான் ஆதார்.
       பிரச்சனையை ஒத்திப்போடவும் மக்களை சமாதானப்படுத்தவும் பெயரளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆதார் தான் இப்போது பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
----------------
          இந்திய குடிமகனை அடையாளம் கான்பதற்காக என்ற அளவில் மட்டுமே முந்தைய காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டது.
         காங்கிரஸ் அரசு மாறியதும் அந்த அட்டை தான் அவர்களுக்கே சரியான ஆப்பாக இன்று பா.ஜ அரசால் செருகப்படுகிறது.
        ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே அதை கடுமையாக எதிர்க்க காரணம் என்ன....?
        மக்களின் தனிப்பட்ட தகவல்கள் அதில் இருப்பதால் திருட வாய்ப்பு உள்ளது, மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசு கண்காணிக்கிறது என்ற இரண்டு முக்கியமான குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
       உண்மையில் பார்க்கப்போனால் இதெல்லாம் சும்மா லுல்லுல்லாயி.....
     ஆதார் மூலமாக அரசியல் கொள்ளையர்களின்  அடிமடியிலேயே பிரதமர் மோடி கை வைக்கிறார் என்பதால் தான் இப்படி கதறுகின்றனர்.
      ஒரு விசயத்தை கவனித்துப் பார்த்தால் உங்களுக்கு புரியும்.
       ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு இணைப்பு, பான் கார்டு இணைப்பு, சமையல் எரிவாயு மானியம், உர மானியம் என அனைத்தையும் ஒவ்வொன்றாக இணைத்தனர். ஒன்பது ஆண்டுகளாக அப்போதெல்லாம் எழாத எதிர்ப்பு இப்போது ஏன் எழுகின்றது....?
            சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைக்க சொன்ன பிறகு தான் அரசியல் கொள்ளையர்கள் கதறி ஒப்பாரி வைக்கின்றனர்.
         சொத்துக்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கும் அரசியல் வாதிகள் கத்தி கூச்சலிடுவதற்கும் என்ன சம்பந்தம் என கேட்பது புரிகிறது. அதையும் பார்க்கலாம்.
-------------------
          முப்பது வருடத்திற்கு முன்பு பிட்பாக்கெட் அடித்து, கள்ள சாராயம் விற்று வயிற்றை கழுவிய இன்றைய அரசியல் வாதிகள் பல ஆயிரம் கோடிகளை குவித்து வைத்து வெள்ளையும் சொள்ளையுமாக இறக்குமதி செய்யப்பட்ட காரில் பறக்கின்றனர்.
         இந்த பணமெல்லாம் எங்கிருந்து வந்தது..? உழைத்தா சம்பாதித்தார்கள்...? கட்சியில் சேர்ந்து பதவிகளை பெற்று லஞ்ச, ஊழல்களினால் சம்பாதித்து வந்தது.
           பத்து லட்சம், இருபது லட்சம் என்றால் வீட்டிலேயே கூட பதுக்கி வைத்து கொள்ளலாம். பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடிகளை எங்கு கொண்டு போய் மறைத்து வைப்பது...?
      இதற்கு கைகொடுப்பது தான் பினாமி பெயரில் சொத்து வாங்குவது.
     ஒரு அமைச்சர்.... பொதுப்பணித்துறை அமைச்சர் என வைத்துக் கொள்ளலாம். மாநிலத்தில் அந்த துறையில் நடக்கும் எந்த ஒப்பந்தத்திலும் குறைந்தது 10% கமிஷன் அவர் பங்காக போய் விடும். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிகள் என்பது குறைந்த பட்ச கணக்கு.
        இவ்வளவு பணத்தை வீட்டில் வைத்து சிக்கன் மசாலா, சிக்கன் மஞ்சூரியன் போல ரூபாய் மசாலா, ரூபாய் மஞ்சூரியன் செய்து அவித்தெல்லாம் சாப்பிட முடியாது.
          தங்கம் வாங்கலாம். வருடத்திற்கு ஐந்தாயிரம் கோடிக்கு தங்கம் வைரம் வாங்கி எத்தனை டன் பதுக்கி வைப்பது. எவனாவது திறமையாக ஆட்டைய போடவும் வாய்ப்புள்ளது. அல்லது ரெய்டில் மாட்டினால் அமைச்சர் பதவியே காலியாகி விடும். அதை எவனிடமாவது கொடுத்து வைத்தாலும் ஆட்சி மாறினால் அதிகாரம் போய் விடும். அதிகாரம் போய் விட்டால் கொடுத்து வைத்தவன் திரும்ப கொடுப்பான் என்பது உறுதி இல்லை.
       சரி, ஊரை அடித்து சேர்த்த பணத்தை என்ன தான் செய்வது...? இதற்கு ஒரே தீர்வு பினாமி சொத்து.
        எவனாவது அல்லக்கை, சொந்தக்காரன், சாதிக்காரன், வைப்பாட்டி பெயர்களில் சொத்து வாங்கி அமைச்சரும், அவரது குடும்பமும் அனுபவிக்கும். அந்த பினாமிக்கு நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல அமைச்சரால் சில சலுகைகள் கொடுக்கப்படும்.
------------------
       இப்போது விசயத்திற்கு வருவோம். லஞ்ச ஊழல் பணத்தில் யார் எவர் பெயரில் சொத்து வாங்கியிருக்கிறார் என்பது இது வரை தெரியாமல் இருந்தது.
       இதற்கு காரணம் சொத்து பரிமாற்றம் என்பது பத்திர பதிவு அலுவலகத்தோடு முடிந்து விடும். அதை பற்றிய தகவல்கள் அரசுக்கு தெரியாது. எவராவது போட்டு கொடுத்தால் மட்டுமே அரசுக்கு தெரியும்.
      இந்த ஓட்டையை வைத்து தான் ஊழல் பெருச்சாளிகள் இது வரை புகுந்து விளையாடினர்.
         ஆட்டையாம்பட்டியில் பரோட்டா கடை நடத்தி வரும் குப்பன் பெயரில் ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் எஸ்டேட்டை அமைச்சர் தனது ஊழல் பணத்தில் வாங்கி குடும்பத்துடன் சொகுசு அனுபவிப்பார்.
       இப்போது இதற்கு தான் வேட்டு வைத்துள்ளார் பிரதமர் மோடி.
         ஒரு சொத்தை வாங்கி பதிவு செய்யும் போது ஆதார் எண் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள சொத்துக்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதும் கட்டாயமாக்கப்பட்டு விட்டது.
    வாங்கும் சொத்து, ஏற்கனவே வாங்கிய சொத்துக்களில் ஆதார் எண்ணை இணைத்தால் என்ன ஆகும்...?
        அதையும் பார்க்கலாம்.
----------------------
        இனி குப்பன் பெயரில் எந்த சொத்து வாங்கினாலும் ஆதார் எண்ணை இணைப்பதால் குப்பன் வாங்கிய சொத்து, என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரம் தானாகவே பத்திர பதிவு அலுவலகத்திலிருந்து வருமான வரித்துறைக்கு போய்விடும்.
         ஊட்டியில் ஆயிரம் ஏக்கர் சொத்து வாங்க குப்பனுக்கு பணம் எப்படி வந்தது என்று குப்பனுக்கு வருமான வரித்துறையிலிருந்து கேள்வி கேட்டு ஓலை பறக்கும்.
      அது மட்டுமல்ல அவரின் ஆதார் எண்ணை கணிணியில் தட்டியதும் ஏற்கனவே அவர் பெயரில் உள்ள சொத்துக்கள், வாங்கிய தொகை, வாங்கிய நாள் எல்லாம் வந்து விழும். அனைத்திற்கும் சேர்த்து குப்பன் பதில் சொல்ல வேண்டும்.
      என்ன பதில் சொல்ல முடியும்...? பரோட்டா விற்ற பணத்தில் ஐந்தாயிரம் கோடி கொடுத்து ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் வாங்கினேன் என்று சொல்ல முடியுமா...?
      ஒரு வேளை அப்படி சொன்னால் அடுத்தடுத்த  கேள்விகள் இப்படி வரும்.
1. ஐந்தாயிரம் கோடி லாபமாக மட்டும் கிடைத்தது என்றால் ஒரு வருடத்தில்  குறைந்தது இருபத்தியைந்தாயிரம் கோடிக்கு
வியாபாரம் நடந்திருக்க வேண்டும். இருபது லட்சத்திற்கு மேல் போனாலே GST வரி கட்ட வேண்டும். GST செலுத்திய விபரம் எங்கே...?
2. பரோட்டா விற்று ஐந்தாயிரம் கோடி லாபம் எனில் அந்த பணத்திற்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்து அதற்கான வருமான வரி கட்ட வேண்டும். ஏன் கட்டவில்லை....?
         பினாமி குப்பனுக்கு பதிலும் சொல்ல முடியாது, கணக்கு காட்டாத கருப்பு பணத்திற்கு விதிக்கப்படும் அபராதத்தை கட்டவும் வழியிருக்காது.
         பிறகு என்ன....? வரி, அபராதம் கட்டாததால் குப்பனின் பெயரில் பினாமியாக வாங்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் எஸ்டேட் ஏலத்திற்கு போக வேண்டியது தான்.
-----------------------
      இது குப்பனோட நிற்காது. அமைச்சர் தன்  வைப்பாட்டி தளுக்கு சுந்தரிக்கு ஊழல் பணத்தில் வாங்கி கொடுத்த பங்களா, பென்ஸ் கார் அனைத்திற்கும் தளுக்கு சுந்தரி வருமானம் வந்த வழியை கணக்கு காட்ட வேண்டும். தவறினால் கார், பங்களா அம்போ தான்.
          இதெல்லாம் தெரிந்து தான் அரசியல் கொள்ளையர்கள் சப்பை காரணங்களை சொல்லி ஆதார் அட்டை கூடாது என்கிறார்கள்.

Monday 30 July 2018

#எலும்புதேய்மானத்தை கட்டுக்குள் வைக்கும் #முருங்கை ....!!

#முருங்கைமருத்துவம்  #அற்புதவைத்தியம்... #முருங்கைகஞ்சி....!!

இரண்டு மூன்று கட்டு முருங்கை கீரை இலைகளை கழுவி  எடுத்து ,

மிக்ஸியில்  அரைத்து சாறாக்கி, 

அந்த சாறு இரண்டு லிட்டர் சாறு இருக்கிறது
என்றால்,

 அதில் ,
     ஒரு கிலோ பச்சரிசியை அதில் சேர்த்து, 

அதில்,
     ஐம்பது கிராம் மிளகையும் சேர்த்து, 

கூடவே ,
    இருநூறு கிராம் பாசிபருப்பு சேர்த்து, 

சிறிது,
    சுக்கு ,மற்றும் 
     ஏலக்காய் சேர்த்து வெயிலில் காயவைக்கவேண்டும்....!!

  அரிசியில் முருங்கை சாறு நன்றாக  ஊறிவிடும்...!!

 அதனை மறுபடியும் நன்றாக ஈரப்பதம் போகும் வரை  காயவைத்து,

 சிறு குருணையாக பொடித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

 அதனை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி, 

தினந்தோறும்  தண்ணீரை கொதிக்க வைத்து அதில் முருங்கை அரிசி குருணையை ,

கஞ்சியாக செய்து சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்கவும்...!!

இந்தக் கஞ்சியை காலை இரவு என்று இரண்டு வேளையும் சாப்பிடலாம்.

 அல்லது காலையில் மட்டும் குடிக்கலாம்....!!

இந்த  கஞ்சி முதுகெலும்பை வலுப்படுத்துகிறது....!! 

L4, L5 இன்று நிறைய நபர்களுக்குத் தேய்ந்து போய் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். 

பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது என்றால் L4, L5 தேய்ந்து போகிறது. 

இருசக்கர வாகனங்கள் அதிகம் பயன்படுத்துவோர்க்கு L4, L5 தேய்ந்து போகிறது. 

அந்த L4, L5 தேய்ந்து போய்விட்டது என்றால் ,

    உட்கார முடியாத நிலை , #முதுகு வலி, #இடுப்புவலி உண்டாகும். 

அந்தமாதிரி L4, L5 தேய்ந்து போவது,

 L4, L5 என்று சொல்லக்கூடிய முதுகெலும்பில் இருக்கக்கூடிய,

" #discprolapse " ஆவது ...

இவை அனைத்துக்குமே ஒரு முழுமையான மருந்து 
முருங்கைக்கீரைதான் ....!!

அதிக #இரும்புசத்து மற்றும் #கால்சியம்சத்து

 கொண்டுள்ள இந்த 
 முருங்கைக்கீரைக் கஞ்சியை

   48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டே வரவேண்டும்..!!

இவ்வாறு சாப்பிட்டு வந்தால்,

 உங்களுடைய முதுகு எலும்பு வலுவாகும்.

  இடுப்பு வலி, #முதுகுவலி குணமாகிவிடும்.....!

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing

il

il